Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'முதலமைச்சர் ஆசையில் கட்சி தொடங்கியவர்கள் அனாதையாக உள்ளனர்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MK Stalin
, சனி, 11 மார்ச் 2023 (16:07 IST)
முதலமைச்சர் ஆசையில் கட்சி தொடங்கியவர்கள் என்று அரசியல் அனாதையாக உள்ளனர் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
கோவையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது ’அடுத்த முதலமைச்சர் நான் தான் எனக் கூறி திடீரென கட்சி தொடங்கியவர்கள் இன்று அனாதையாக உள்ளனர் என்று கூறினார். தேர்தலில் போட்டியிட அல்ல, மக்கள் பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் திமுக என்று அவர் கூறினார். 
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் யாரை மனதில் வைத்து இவ்வாறு பேசியிருப்பார் என்று நெட்டிசன்கள் பல பெயர்களை குறிப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக சீமான் கமல்ஹாசன் விஜயகாந்த் ஆகியவர்களைத்தான் முதலமைச்சர் கூறி இருப்பார் என்றும் தெரிவித்து வருகின்றனர். அவர் யாரை நினைத்து கூறினார் என்பது அவருடைய மனதிற்கு மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சக மாணவர்கள் தாக்கி 10ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் இரங்கல்