Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (14:09 IST)
தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்றும், சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் பேசிய முதல்வர், நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
 
மேலும் கடந்த 6 மாத குற்ற வழக்குகள்  குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து களைய வேண்டும் என்றும் அவர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
 
மேலும் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்பதால் சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், காவல்துறை அதிகாரிகள் மிக மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments