Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.. பெருமளவு முதலீடு குவிந்துள்ளதாக பேட்டி..

Siva
புதன், 7 பிப்ரவரி 2024 (08:32 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்பெயின் நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க சென்ற நிலையில் அவர் இன்று சென்னை திரும்பியுள்ளார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பெருமளவு தமிழ்நாட்டிற்கு முதலீடு குவிந்துள்ளதாகவும் ரூ.3440 கோடிக்கு முதலீடுகள் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஈர்க்கப்பட்டு உள்ளதாகவும் பேட்டி அளித்தார்
 
நியூயார்க் டைம்ஸ் நாளேடு தமிழ்நாடு உற்பத்தி துறையில் முன்னணியில் இருப்பதாக வெளியான செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள் என்றும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன என்றும் தெரிவித்தார். 
 
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தொழில் துறையில் முன்னேறி வருகிறது என்றும் இனி நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு எனது வெளிநாட்டு பயணம் இருக்கும் என்றும் தெரிவித்தார். 
 
ஹபக் லாய்டு என்ற நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2500 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தெரிவித்த அவர் இன்னும் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பேன் என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments