Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற ஸ்டாலின்: கருணாநிதி நூல் பரிசு..!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (10:18 IST)
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற ஸ்டாலின் அவருக்கு கருணாநிதி குறித்த நூல் ஒன்றையும் பரிசாக அளித்தார். 
 
எதிர் கட்சிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு தனி விமானத்தில் பீகார் சென்றார். இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன. 
 
இந்த நிலையில் பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ்வுடன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சந்தித்தார். மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் அவர் ஆசி பெற்றதாகவும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன,.
 
மேலும் இரு தலைவர்கள் சந்திப்பின் அடையாளமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய நூல் ஒன்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வாலிபர்.. எலி மருந்து கொடுத்த காதலி..!

அச்சமும், பதற்றமும் இல்லாமல், துணிச்சலுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். கமல்ஹாசன்

மிகப்பெரிய சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. நம்பிக்கை இல்லாத முதலீட்டாளர்கள்..!

தமிழகத்தில் இதுவரை 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. கேசி வீரமணி குற்றச்சாட்டு..!

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மில்லி மீட்டர் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments