Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை மேல்முறையீடு செய்தவர்களுக்கு ரூ.1000: முதல்வர் வழங்குகிறார்...!

நாளை மேல்முறையீடு செய்தவர்களுக்கு ரூ.1000: முதல்வர் வழங்குகிறார்...!
, வியாழன், 9 நவம்பர் 2023 (13:16 IST)
மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் பயன் பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் மேல்முறையீடு செய்த பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும்  பணி நாளை முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பயனாளிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தை நாளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 
 
இந்த நிகழ்ச்சியில் அவரது கையால் சிலருக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகையை வழங்குவார் என்றும் நாளையே தமிழக முழுவதும் உள்ள புதிய பயனாளிகளுக்கு உரிமை தொகைகள் அவரவர் வங்கி கணக்குகளில் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.  
 
ஏற்கனவே மேல்முறையீடு செய்த மகளிர்களுக்கு  ரூ.1 செலுத்தி உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்கொலை செய்ய முயன்ற சென்னை இளைஞரை காப்பாற்றிய இண்டர்போல்.. ஆச்சரிய தகவல்..!