Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டுமா? முதல்வர் ஆவேச கேள்வி

MK Stalin
, வியாழன், 14 டிசம்பர் 2023 (14:25 IST)
இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டுமா? என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆவேச கேள்வி எழுப்பியுள்ளார். கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் மத்திய பாதுகாப்பு அதிகாரி இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பேசியதற்கு முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?

பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2026-ல் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி: பொதுச்செயலாளர் ஆன பின் பிரேமலதா பேச்சு..!