Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் வழக்கு: என்ன காரணம்?

Siva
வியாழன், 14 மார்ச் 2024 (11:44 IST)
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவருக்கும் எதிராக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விவகாரம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக அண்ணாமலை ஆகியோர் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை இணைத்து சில கருத்துக்களை பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி  அவதூறு கருத்து தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் 
 
முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments