Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்சார வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

stalin
, புதன், 20 ஜூலை 2022 (18:17 IST)
மரக்காணம் அருகே வாழைத்தோப்புகாக மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த மின்சார வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து மரணமடைந்த 3 பேரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

+2 விடைத்தாள் மதிப்பெண் கூட்டலில் குளறுபடி: ஆசிரியர்கள் நேரில் ஆஜராக உத்தரவு