அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உண்ட மாணவி உயிரிழப்பு: முதலமைச்சர் ஆறுதல்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (13:30 IST)
நீலகிரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை கொண்ட மாணவி உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆறுதல் கூறியதோடு நிதி உதவி அறிவித்துள்ளார். 
 
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வட்டம் மேற்கு கிராமத்தில் உருது நடுநிலைப் பள்ளியில் கடந்த ஆறாம் தேதி 4 மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை உட்கொண்டதாக தெரிகிறது.
 
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவி ஜெய்பா பாத்திமா என்பவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். 
 
மேலும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு மூன்று லட்ச ரூபாயும் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments