Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜூலை 31 வரை ஊரடங்கு: என்னென்ன புதிய தளர்வுகள்?

ஜூலை 31 வரை ஊரடங்கு: என்னென்ன புதிய தளர்வுகள்?
, வெள்ளி, 16 ஜூலை 2021 (19:16 IST)
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் 
 
இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை தொடர்வதாக ஒரு சில கட்டுப்பாடுகளையும் தளர்வுகளை அவர் அறிவித்துள்ளார். திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தடை தொடரும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார் 
 
அதேபோல் தட்டச்சு சுருக்கெழுத்து மையங்கள், தொழிற்பயிற்சி மையங்கள் ஆகியவை இயங்கலாம் என்றும் 50 சதவீத மாணவர்கள் மற்றும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே இருந்த தளர்வுகளான திருமண நிகழ்ச்சிக்கு 50 பேர்கள் இறுதி நிகழ்ச்சிக்கு 20 பேர்கள் மட்டுமே தொடரும் என்றும் அறிவித்துள்ளார் 
 
திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் திரையரங்குகள் தற்போது திறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'கொங்குநாடு' எனப் பதிவிட்டது அச்சுப்பிழை - அமைச்சர் எல். முருகன்