முதல்வரும் உதயநிதியும் மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன் ஆவேசம்..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (16:25 IST)
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்பதாக கூறினார். ஆனால் 15 ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். 
 
அதேபோல் அமைச்சர் உதயநிதியும் செய்தியாளர்களிடம் பேசிய போது மோடி 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக மோடிகூறினார், ஆனால் தரவில்லை என்று தெரிவித்தார். 
 
இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ரூபாய் 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதல்வர் வெளியிட வேண்டும். ஆதாரத்தை வெளியிட விட்டால் முதல்வரும் அமைச்சர் உதயநிதியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். 
 
ரூபாய் 15 லட்சம் வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி தந்ததாக ஊழலில் திளைத்த கட்சிகள் பொய் பரப்புகின்றன என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

அடுத்த கட்டுரையில்