Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்..! ஜெயக்குமார் வலியுறுத்தல்..!!

Senthil Velan
திங்கள், 24 ஜூன் 2024 (13:11 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை  சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அதிமுக  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 57 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து  அதிமுக சார்பில் தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
 
அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கள்ளச் சாராய மரணங்களை கண்டித்து  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், மெத்தனால் கடத்தல் இரு மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் நிகழ்வாக உள்ளது என்றும் இதை சிபிசிஐடியால் எப்படி விசாரிக்க முடியும் என்றும் அதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் கள்ளச் சாயம் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையம்,  ஒரு கண்துடைப்பு ஆணையம் என்று விமர்சித்தார். இந்த கமிஷனின் நடவடிக்கைகள் கள்ளச்சாராய மரண விவகாரத்தை நீர்த்துபோகச் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

ALSO READ: கள்ளச்சாராய விவகாரம்.! வி.சி.க. போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.!!
 
மக்கள் பிரச்சினைகளை சட்டப் பேரவையில் தான் விவாதிக்க முடியும் என்றும் ஆனால் இந்த அரசு சட்டப்பேரவையில் விவாதிக்க தயங்குகிறது என்றும் அவர் கூறினார். எனவே கள்ளச்சாராய மரண விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெர்மனி அதிபர் ஒரு திறமையற்ற முட்டாள்.. ஜனநாயகத்திற்கு எதிரான கொடுங்கோலன்.. எலான் மஸ்க்

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்.. சிறப்பு ஏற்பாடுகளை செய்த பிர்லா கோளரங்கம்..!

பரந்தூரை அடுத்து வேங்கை வேல் செல்கிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அதானி மகனுக்கு எளிமையான திருமணம்.. ஒரு சில லட்சங்கள் மட்டுமே செலவா?

தமிழகத்தில் பதுங்கி இருக்கும் வங்கதேசத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments