Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா பாதத்தை தொட்டு வணங்கி கதறி அழுத முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

ஜெயலலிதா பாதத்தை தொட்டு வணங்கி கதறி அழுத முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

ஜெயலலிதா பாதத்தை தொட்டு வணங்கி கதறி அழுத முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!
, செவ்வாய், 6 டிசம்பர் 2016 (08:10 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் நேற்று இரவு மரணமடைந்தார். அவருடைய உடல் ராஜாஜி மஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு மரியாதை செலுத்திய தற்போதைய முதல்வர் பண்ணீர்செல்வம் கதறி அழுதார்.


 
 
அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் மருத்துவ போராட்டத்துக்கு பலனளிக்காமல் மரணமடைந்த ஜெயலலிதாவின் உடல் மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மத சம்பிரதாயங்களை முடித்த பின்னர் இன்று காலை அண்ணா சாலையில் உள்ள ராஜாஜி மஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
 
அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் பண்ணீர் செல்வம் அவரது பாதத்தை தொட்டு வணங்கி நீண்ட நேரம் கதறி அழுதார். தன்னுடைய தலைமையை இழந்து சொல்லன்னா துயரில் இருக்கும் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களும் கதறி அழுத வண்ணம் அவரது அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு