Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7.5% உள் ஒதுக்கீடு குறித்து பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை: முதல்வர்

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (18:42 IST)
நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு குறித்து இன்னும் தமிழக கவர்னர் முடிவு எடுக்காமல் உள்ளார். இதனை அடுத்து திமுகவினர் ஆவேசமான அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
 
நீட் தேர்வை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு துரோகமிழைத்த திமுக-காங்கிரஸ் கூட்டணி 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநருக்கு அதிமுக அரசு அழுத்தம் கொடுக்கவில்லை என்று பேச எந்த அருகதையும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் அதிமுக அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறதே என்ற அச்சத்தில் அறிக்கை அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின் என்றும், ஸ்டாலினின் நீலிக் கண்ணீர் மக்கள் மனங்களில் சலனத்தை ஏற்படுத்தாது என்றும், வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தங்களால்தான் எல்லாம் நடந்தது என காண்பிக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் முடிவு செய்வதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்றும், நீட் தேர்வை இந்தியாவில் அறிமுகம் செய்து மாணவர்களுக்கு துரோகம் செய்தது திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் என்றும் முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments