Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களோடு மக்களாக உணவு அருந்திய ஓ.பி.எஸ்...

மக்களோடு மக்களாக உணவு அருந்திய ஓ.பி.எஸ்...
, வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (18:37 IST)
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் 48வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக, திமுக என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து கட்சியினரும் அண்ணா புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


 

 
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என பலரும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 
திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியும் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் தமிழக அரசு சார்பில் அண்ணா நினைவுநாள் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
 
அதில் முதல்வர் ஓ.பி.எஸ் கலந்து கொண்டார். அப்போது, மக்களோடு மக்களாக அமர்ந்து அவர் சமபந்தி விருந்தில் உணவு சாப்பிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகிய பெண்களின் மொபைல் எண்கள் ரூ.500க்கு விற்பனை