Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்.கே.நகரில் நன்றி தெரிவித்தார் முதல்வர் ஜெயலலிதா: முன்மாதிரி தொகுதியாக்குவேன்!

ஆர்.கே.நகரில் நன்றி தெரிவித்தார் முதல்வர் ஜெயலலிதா: முன்மாதிரி தொகுதியாக்குவேன்!
, திங்கள், 6 ஜூன் 2016 (18:52 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா இன்று அந்த தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறி ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக்குவேன் என உறுதியளித்தார்.


 
 
வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி கூறிய போது பேசிய ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றிருக்கிறீர்கள். கடந்த முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றபோது, என் சக்திக்கு உட்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றினேன்.
 
தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன். விரைவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி முடிப்பேன். ஆர்.கே.நகர் தொகுதியை தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதற்கு தேவையான அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
 
நான் ஒவ்வொரு முறையும் இங்கு வரும் போது, நீங்கள் பொழிகின்ற அன்பு மற்றும் அளிக்கும் வரவேற்பு என்னை நெகிழ வைக்கிறது. அந்த அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடந்து கொள்வேன். என்னை மகத்தான வெற்றி பெற செய்தமைக்கு நன்றி என பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்கள் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம்: முதல்வர் வேண்டுகோள்!