Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண்கள் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம்: முதல்வர் வேண்டுகோள்!

ஆண்கள் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம்: முதல்வர் வேண்டுகோள்!
, திங்கள், 6 ஜூன் 2016 (18:26 IST)
ஆண்கள் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். வெளிநாட்டினர் அளவோடு குடிக்கின்றனர் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


 
 
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்று நட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசி சந்திரபாபு நாயுடு, வெளிநாட்டினர் அளவுக்கு அதிகமாக குடிப்பதில்லை அவர்கள், ஒரு நாளைக்கு ஒரு பெக் அளவுக்குத்தான் குடிக்கிறார்கள்.
 
ஆனால் நம் நாட்டில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, போதையில் வீட்டில் மனைவியை அடித்து கஷ்டப்படுத்துகிறார்கள். மது போதையில் பெண்களை கை நீட்டி அடிப்பது மிகவும் மோசமான செயல்.
 
ஆண்கள் அதிகமாக மது அருந்துவிட்டு மனைவியை அடிக்கும் நாகரிகமற்ற செயலை கைவிட வேண்டும். மது குடிக்கும் பணத்தில் மரக்கன்று நட்டால் அது உங்களுக்கு பெரிய புண்ணியத்தை தரும் என்றார் சந்திரபாபு நாயுடு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயம் செய்யப் போகிறார் நடிகர் விஷால்!