Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது: அப்பல்லோ அறிக்கையில் தகவல்!

முதல்வர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது: அப்பல்லோ அறிக்கையில் தகவல்!

முதல்வர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது: அப்பல்லோ அறிக்கையில் தகவல்!
, செவ்வாய், 4 அக்டோபர் 2016 (16:41 IST)
தமிழக முதல்வர் ஜெயலலித கடந்த மாதம் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களுக்கு மேலாகியும் அவர் இன்னமும் மருத்துவமனையில் தான் இருக்கிறார்.


 
 
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகயும் முதல்வர் இன்னமும் குணமாகி வீடு திரும்பவில்லையே என்ற ஏக்கத்தில் உள்ளனர் அதிமுகவினர்.
 
முதல்வருக்கு என்ன பிரச்சனை என தெளிவான பதில் இல்லாமல் குழப்பத்தில் தமிழக மக்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொஞ்சம் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது.
 
கடந்த சனிக்கிழமை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் முதன் முதலாக முதல்வருக்கு நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், லண்டன் மருத்துவர் ரிச்சார்டின் ஆலோசனைப்படி சிகிச்சைகள் நடந்து வருவதாக அதில் கூறப்பட்டது.
 
இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் முதல்வர் குணமடைந்து வருகிறார். கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் அவ்வப்போது கொடுக்கப்பட்டு வருகின்றன.
 
முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். அவரின் உடலுக்கு தேவையான சுவாசத்தை வென்டிலேட்டர் மூலம் தேவைப்படும்போது மட்டும் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடூ மற்றும் வாகனக் கடனின் வட்டி விகிதம் குறையும்: இந்திய ரிசர்வ் வங்கி