Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 31-க்கு பிறகு என்ன? பொதுமுடக்க ஆலோசனையில் ஈபிஎஸ்!!

Webdunia
திங்கள், 25 மே 2020 (10:51 IST)
மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் 765 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,227 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் சென்னையில் மட்டும் 587 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வரும் 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் நிரைவடைகிறது. 
 
எனவே, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments