Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (13:40 IST)
நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் கள ஆய்வுக் கூட்டத்தில் இரு கோஷ்டியினர் அடிதடி செய்து மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மதுரையில் நடந்த அதிமுக ஆய்வு குழு கூட்டத்திலும் அடிதடி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் முன்னிலையில் மதுரையில் இன்று கள ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் செல்லூர் ராஜு கோஷ்டி மற்றும் டாக்டர் சரவணன் கோஷ்டி நேருக்கு நேர் மோதிக்கொண்டு, தங்களை ஏன் பேச அனுமதிக்கவில்லை என கூறியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அமைதியாக இருக்கும்படி, மைக்கில் வேண்டுகோள் விடுத்தும் கட்சி நிர்வாகிகள் அவரது பேச்சை மதிக்காமல் அடிதடிகளில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லையில் அதிமுக ஆய்வு கூட்டத்தில் அடிதடி, மதுரையில் கள ஆய்வுக் கூட்டத்தில் அடிதடி என தொடர்ச்சியாக அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அடிதடி சண்டை நடந்து வருவது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

சிந்து நதிநீர் நிறுத்தம்! விவசாயம் வீழ்ச்சி.. பஞ்சத்தில் விழுந்த பாகிஸ்தான்? இனியாவது திருந்துமா?

ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.73000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

இன்ஸ்டாவில் ஃபாலோயர்கள் குறைந்ததால் கணவனை விவாகரத்து செய்யும் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

மாதம் ரூ.8 லட்சம் சம்பாதித்த ஆட்டோ டிரைவர்.. ஆப்பு வைத்த ஒரே ஒரு லிங்க்ட்-இன் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments