Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்.கே.நகரில் அடிதடி சண்டை. தினகரன் - ஓபிஎஸ் ஆதரவாளர்களால் பதட்டம்

ஆர்.கே.நகரில் அடிதடி சண்டை. தினகரன் - ஓபிஎஸ் ஆதரவாளர்களால் பதட்டம்
, வெள்ளி, 31 மார்ச் 2017 (23:00 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரண்டாக உடைந்த அதிமுகவின் இரு பிரிவினர்களான ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோர்களின் ஆதரவாளர்கள் விறுவிறுப்பாக வாக்கு சேகரித்து வரும் நிலையில் இன்று இரு தரப்பினர்களுக்கு இடையே அடிதடி மற்றும் கைகலப்பு ஏற்பட்டதால் தொகுதி முழுவதும் பதட்டம் நிறைந்து காணப்படுகிறது.


 






ஆர்.கே.நகரில் உள்ள முக்கிய மசூதி ஒன்றில் தொப்பிக்கு பதிலாக குல்லா போட்டு வந்து தினகரன் வாக்கு சேகரித்து வந்தார். அப்போது அங்கு வந்த மதுசூதனன் ஆதரவாளர்களும் இரட்டை மின்கம்பத்திற்கு வாக்கு சேகரித்ததால் இருதரப்பினர்களிடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஆர்கே நகரில் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஜி.ஆர். சமாதிக்கு திடீரென சென்ற வைகோ! என்ன காரணம்?