Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்நீதிமன்றத்திற்கு 11 நாட்கள் விடுமுறை – வழக்குகள் ஒத்திவைப்பு !

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (12:51 IST)
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளை ஒட்டி உயர் நீதிமன்றங்களுக்கு 11 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வ்ருகின்றன. அந்த வரிசையில் இப்போது உயர் நீதிமன்றங்களுக்கான விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றங்களுக்கு டிசம்பர் 22 ஆம் தேதி முதல் (நாளை) முதல் ஜனவரி 1 முதல் மொத்தம் 11 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வழக்குகள் ஒத்திப்போகும் சூழல் உருவாகியுள்ள்து.

இடைப்பட்ட  இந்த விடுமுறை நாளில் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி மட்டும் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் அவசரகால வழக்குகள் விசாரிக்கப்படும். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எம்.நிர்மல் குமார், சி.சரவணன், பி.புக ழேந்தி ஆகிய நீதிபதிகளும் ,சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா, பி.ராஜமாணிக்கம், கிருஷ்ணன் ராமசாமி ஆகிய நீதிபதிகளும், விடுமுறை கால நீதிபதிகளாக செயல்படுவார்கள்  என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் நேற்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments