Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து கடவுள் படங்களை எரித்து கழிவறையில் போட்ட மதபோதகர் கைது

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (09:37 IST)
இந்து கடவுளின் படங்களை எரித்து அதன் சாம்பலை கழிவறையில் போட்ட கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த எஸ்.குருபட்டி என்ற பகுதியில் ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் பெந்தேகோஸ்தே திருச்சபையில் மதுரையை சேர்ந்த ஜான் பிரிட்டோ என்ற 53 வயது நபர் மதபோதகராக இருந்து வருகிறார்.
 
இவர் சமீபத்தில் இந்து கடவுளின் படங்களை எரித்து அதன் சாம்பலை கழிவறையில் போட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான 'வீடியோ' மற்றும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானதை அடுத்து இந்து முன்னணி செயலர் மாதேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத போதகரை போலீசார் கைது செய்தனர்,
 
அவர் மீது பிற மதம் மற்றும் மத நம்பிக்கையை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டது உட்பட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments