Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரமாக பரவும் காலரா! தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (12:18 IST)
காரைக்காலில் காலரா பரவல் அதிகரித்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காலராவில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து காண்போம்.

காலரா என்றால் என்ன?

காலரா என்ற நோய் “விப்ரியோ காலரே” என்ற பாக்டீரியாவினால் ஏற்படுவதாகும். சுகாதாரமற்ற தண்ணீரால் இந்த காலரா நோய் பெருமளவில் பரவுகிறது.

அறிகுறிகள் என்ன?

காலரா பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு வயிற்றுபோக்கு, வாந்தி ஏற்படும். அதனுடன் மயக்கம், காய்ச்சல், உடல் சோர்வு போன்றவையும் ஏற்படும். உடலில் இருந்து அதிகமான நீர் வெளியேறுவதால் முகம், உதடுகள் வறட்சியடைந்து காணப்படும்.

தடுக்கும் வழிமுறைகள் என்ன?

சுகாதாரமற்ற உணவு மற்றும் அசுத்தமான தண்ணீரினால் காலரா பரவுகிறது. முக்கியமாக மழை காலங்களில் காலரா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

காலராவிலிருந்து தற்காத்துக் கொள்ள குடிதண்ணீரை சூடாக்கி பின்னர் அருந்த வேண்டும். உணவுகளை அந்தந்த சமயத்திற்கு தேவையான அளவு மட்டும் சமைத்து அப்போதே சாப்பிட வேண்டும்.

காய்கறி, பழங்களை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு சாப்பிட வேண்டும்.

திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்.

காலரா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments