Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் பொண்ணு சாகுற அளவு கோழையில்ல.. அவன்தான் காரணம்! – சித்ரா தாயார் பரபரப்பு புகார்!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (13:21 IST)
சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா இறந்ததற்கு ஹேமந்த்தான் காரணம் என சித்ராவின் தாயார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா நேற்று நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள சித்ராவின் தாயார் “தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என் பெண்ணை நான் வளர்க்கவில்லை. அவள் தைரியமானவள். என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஹேமந்த்தான் என் மகளை கொன்றிருக்க வேண்டும்” என அழுகையுடன் கூறியுள்ளார். இதனால் மேலும் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம் மற்றும் ஹேமந்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments