Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவலை சமாளிக்க இந்தியாவுக்கு உதவி! – நேசகரம் நீட்டும் சீனா!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (16:09 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இவ்விவகாரத்தில் உதவ முன்வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆக்ஸிஜன், தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்டவையும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்திய நிலைமை குறித்து பேசிய சீன வெளியுறவு துறை அதிகாரி ஒருவர் “கொரோனா உலகத்திற்கே எதிரி. அதை விரட்டியடிக்க வேண்டிய கடமை உலக நாடுகளுக்கு உள்ளது. அதனால் இந்தியாவின் தேவைக்கேற்ப உதவி செய்ய தயார்” என கூறியுள்ளார். முன்னதாக பிரான்ஸ் இந்தியாவிற்கு உதவ முன்வந்த நிலையில் தற்போது சீனாவும் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments