Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்லூர் ராஜூவால் சீனாவுக்கு கப்பலேறிய தமிழ்நாட்டின் மானம்

செல்லூர் ராஜூவால் சீனாவுக்கு கப்பலேறிய தமிழ்நாட்டின் மானம்
, ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (20:59 IST)
சமீபத்தில் வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் போட்டு மூடும் திட்டம் ஒன்றை தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். ரூ.10 கோடி செலவில் தெர்மோகோல் வாங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த திட்டம் பத்தே நிமிடங்களில் தோல்வி அடைந்தது. ஆம், அணையில் போடப்பட்ட தெர்மோகோல் அனைத்தும் கரை ஒதுங்கி வீணாகின



 


இந்த நிலையில் இதுகுறித்து தமிழக ஊடகங்கள் மட்டுமின்றி இந்திய ஊடகங்களும் விமர்சனம் செய்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் மானம் சீனா வரை சென்றுள்ளது.

சீன பத்திரிகை ஒன்று இந்த திட்டத்தின் தோல்வி குறித்து புகைப்படத்துடன் கிண்டலாக செய்தி வெளியிட்டுள்ளது. இதே தெர்மோகோல் திட்டத்தை பல நாடுகள் சிறப்பாக செய்த நிலையில் தமிழகம் இந்த விஷயத்தில் கோட்டை விட்டதோடு மானத்தையும் காற்றில் பறக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!