”முடிஞ்சா தொட்டு பார்..!” தைவானில் அமெரிக்க போர்க்கப்பல்! – ஆத்திரமடைந்த சீனா!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (08:23 IST)
தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ள அமெரிக்கா தனது இரண்டு போர் கப்பல்களை தைவான் ஜலசந்தி வழியாக அனுப்பியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு போருக்கு பின்னர் சீனாவிலிருந்து பிரிந்த தைவான் தன்னை தனி நாடாகவே கருதி வருகிறது. ஆனால் சீனாவோ தைவானை தங்களது எல்லைக்குட்பட்ட பிராந்தியம் என்று சொல்லி வருகிறது.

இதற்கிடையே அமெரிக்கா தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ALSO READ: ”உக்ரைன் நிலமை ஆக்கிடாதீங்க..” – உலக நாடுகளிடம் உதவி கேட்கும் தைவான்!

இந்நிலையில் அடுத்தடுத்து சில அமெரிக்க எம்.பிக்களும் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் கடுப்பான சீனா தைவானை சுற்றி கடல் பகுதிகளில் போர் பயிற்சிகளை நடத்தி தைவானுக்கு எச்சரிக்கை விடுத்தது.

தைவானை மிரட்டினால் சும்மா இருக்குமா அமெரிக்கா? முடிந்தால் தொட்டுப்பார் என்கிற ரீதியில் தைவான் ஜலசந்தி வழியாக யு.எஸ்.எஸ் ஆண்டிடம், யு.எஸ்.எஸ் சான்ஸ்லர்வில்லே ஆகிய போர்க்கப்பல்களை அனுப்பி சீனாவுக்கு பதில் எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா.

இது தங்களை ஆத்திரமூட்டுவதற்காக செய்வது போல உள்ளதாக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. ”அமெரிக்க போர்க்கப்பல்களில் நகர்வை தீவிரமாக கண்காணித்தோம். எந்த நேரத்திலும் எந்த ஆத்திரமூட்டலையும் முறியடிக்க சீன படைகள் தயாராக உள்ளன” என சீன ராணுவத்தின் கிழக்கு கட்டளை பிரிவின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

அடுத்த கட்டுரையில்
Show comments