Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி: முன்பதிவு துவங்குவது எப்போது?

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (12:25 IST)
15 - 18 வயதான சிறார்கள் கோவாக்சின் தடுப்பூசி போட COWIN-ல் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தகவல். 

 
தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 33,20,000 பேர் இருக்கிறார்கள். மத்திய அரசின் வழிகாட்டுதல் படி ஜனவரி 3 ஆம் தேதியே தமிழ்நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கும். 
 
அதேபோல், தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடியே நான்கு லட்சம் பேருக்கும், முன்கள பணியாளர்கள் 9 லட்சத்து 78 ஆயிரம் பேருக்கும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி செலுத்தப்படும்.
 
15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் 15 முதல் 18 வயதான சிறார்கள் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஜன.1 முதல் முன்பதிவு தொடங்குகிறது. 15- 18 வயதான சிறார்கள் கோவாக்சின் தடுப்பூசி போட COWIN-ல் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்கள் 10 ஆம் வகுப்பு ஜ.டி.கார்டை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments