கோவைக்கு திமுக உறுப்பினரே மேயர்... உதயநிதி ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (12:02 IST)
மாதந்தோறும் 10 நாட்கள் கோவையில் தங்கி பணியாற்றுவேன் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

 
திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, 
 
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பல்வேறு இடங்களில் திமுக வெற்றி பெற்றாலும், கோவை மக்கள் ஏமாற்றி விட்டனர். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் மற்றும் மாவட்டம் முழுவதும் 800 நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கோவை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்தவரை அமர வைப்போம்.
 
மேயர் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவராக திமுக உறுப்பினரை அமர வைப்போம் என்று நீங்கள் அளித்த உறுதி மொழியை மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பேன். கோவையில் 100 சதவீதம் வெற்றி என்ற இலக்கை அடையும் வரை ஒயக்கூடாது. வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை கொடுத்தால் மாதந்தோறும் 10 நாட்கள் கோவையில் தங்கி பணியாற்றுவேன் என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments