Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை புகழ்ந்து பேசிய எதிர்க் கட்சி துணைத்தலைவர் !

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (17:35 IST)
சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமை பேசியதைப் பார்து நான் அசந்துபோய்விட்டதாக திமுக பொருளாளர் மற்றும் சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் கேள்வி நேரம் முடிவுற்றதாக சபாநாயகர் தெரிவித்தார். அதற்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் : நேற்று கேள்வி நேரத்தைக் குறைத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். அதைக் குறைக்கமுடியாது என்று கூறினீர்கள்..அதை ஏற்றுக்கொண்டேன்.
 
இந்த ஆட்சிக்கு முன்னால்  இருந்த ஆட்சியில் கேள்வி நேரத்தின் போது,பொதுப்பணித்துறை , காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக கேள்விகள் கட்டாயம் இடம்பெறும். சமீபகாலமாக இத்துறையில் கேள்விகளே எழுவதில்லை.
 
இந்தக் கேள்விகளுக்கு முதல்வர் பதில் சொல்ல முடியாதவர் அல்ல. முதல்வர் சிறப்பாக பதில் சொல்லக்கூடியவர். அவரது பதிலைக் கேட்டு நாம் அசந்துபோயுள்ளேன்.அதனால் நாளை பொதுப்பணித்துறை ,காவல்துறை , தொடர்பான கேள்விகள் இடம்பெறும் என எதிர்பார்க்கிறேன் இவ்வாறு தெரிவித்தார்.
 
இதனைத்தொடர்ந்து பேசிய துணைமுதல்வர் பன்னீர் செல்வம், முதல்வர் பொறுப்பேற்றுள்ள அனைத்து  துறைகளிலும் நீங்கள் கேட்டாலும் அது குறித்து பதில் அளிக்க தயாராகவே உள்ளார் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments