Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..! இரு மாநில ஒத்துழைப்பு குறித்து பதிவு..!!

Senthil Velan
புதன், 12 ஜூன் 2024 (13:14 IST)
நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடி முன்னிலையில் ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபுநாயுடு இன்று பதவி ஏற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் அப்துல்நசீர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பும்  செய்து வைத்தார். சந்திரபாபு நாயுடுவுடன் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.
 
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.  

ALSO READ: சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள்.? சபாநாயகர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
 
உங்கள் தலைமை மாநிலத்திற்கு செழிப்பையும் நலனையும் கொண்டு வரட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இரு மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையேயான பிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments