மக்களின் உயிரைக் காக்கும் விலை உயர்ந்த மருந்துகள் கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவு !

Webdunia
சனி, 27 ஜூன் 2020 (17:54 IST)
தமிழகத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை ஒழித்து மக்களைப் பாதுக்காக்க  மத்திய – மாநில அரசுகள் இணைந்து பணியாற்றிக் கொண்டுள்ளன.

இந்நிலையில் , கொரொனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் TOCILIZUMAB- 1200 குப்பிகள்,  REMDEVISIR – 42, 200 குப்பிகள்,   ENOZAPARIN – 1,00,000 குப்பிகள்
போன்ற விலை  உயர்ந்த மருந்துகள், ஊசிகளை மருத்துவ சேவைக்கழகம் மூலம் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகிறது.

இதுகுறித்து  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களைக் காக்கவும், சிகிச்சைக்காகவும்  விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்; அவை மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என  கூறியுள்ளார்
.
மேலும்,   பாதி மருந்துகள் வந்திருக்கும் நிலையில் மீதி மருந்துகள் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதாகவும்,  சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments