Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களின் உயிரைக் காக்கும் விலை உயர்ந்த மருந்துகள் கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவு !

Webdunia
சனி, 27 ஜூன் 2020 (17:54 IST)
தமிழகத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை ஒழித்து மக்களைப் பாதுக்காக்க  மத்திய – மாநில அரசுகள் இணைந்து பணியாற்றிக் கொண்டுள்ளன.

இந்நிலையில் , கொரொனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் TOCILIZUMAB- 1200 குப்பிகள்,  REMDEVISIR – 42, 200 குப்பிகள்,   ENOZAPARIN – 1,00,000 குப்பிகள்
போன்ற விலை  உயர்ந்த மருந்துகள், ஊசிகளை மருத்துவ சேவைக்கழகம் மூலம் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகிறது.

இதுகுறித்து  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களைக் காக்கவும், சிகிச்சைக்காகவும்  விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்; அவை மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என  கூறியுள்ளார்
.
மேலும்,   பாதி மருந்துகள் வந்திருக்கும் நிலையில் மீதி மருந்துகள் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதாகவும்,  சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments