அத்திவரதர் தரிசனம் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Webdunia
புதன், 7 ஆகஸ்ட் 2019 (15:09 IST)
அத்திவரதர் தரிசனம் நிறைவடைய இன்னும் 10 நாட்களே மீதம் இருப்பதால் கட்டுக்கடங்காமல் வரும் கூட்டத்தை சமாளிக்க காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

40 வருடங்களுக்கு ஒருமுரை நடைபெறும் அற்புத நிகழ்வான அத்திவரதர் தரிசனம் கடந்த ஜூலை 1 முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொருநாளும் லட்சக்கணக்கில் மக்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்டு 1 முதல் அத்திவரதர் நின்ற திருகோலத்தில் காட்சியளித்து வருகிறார். 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவம் ஆகஸ்டு 17 அன்று நிறைவடைய இருக்கிறது.

அதனால் தரிசனத்துக்காக லட்சக்கணக்கில் மக்கள் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் நகரப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்டு 13, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments