Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்திவரதர் தரிசனம் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Webdunia
புதன், 7 ஆகஸ்ட் 2019 (15:09 IST)
அத்திவரதர் தரிசனம் நிறைவடைய இன்னும் 10 நாட்களே மீதம் இருப்பதால் கட்டுக்கடங்காமல் வரும் கூட்டத்தை சமாளிக்க காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

40 வருடங்களுக்கு ஒருமுரை நடைபெறும் அற்புத நிகழ்வான அத்திவரதர் தரிசனம் கடந்த ஜூலை 1 முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொருநாளும் லட்சக்கணக்கில் மக்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்டு 1 முதல் அத்திவரதர் நின்ற திருகோலத்தில் காட்சியளித்து வருகிறார். 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவம் ஆகஸ்டு 17 அன்று நிறைவடைய இருக்கிறது.

அதனால் தரிசனத்துக்காக லட்சக்கணக்கில் மக்கள் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் நகரப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்டு 13, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments