Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பருவமழையால் ஒரு உயிரிழப்பு கூட இருக்க கூடாது: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

Siva
திங்கள், 30 செப்டம்பர் 2024 (11:39 IST)
வடகிழக்கு பருவமழையின் போது ஒரு உயிரிழப்பும் ஏற்படக் கூடாது என்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

காலம் நிலை மாற்றத்தால் ஒரே நேரத்தில்  மொத்தமாக பெய்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க, வானிலை தகவல்களை உடனுக்குடன் வழங்க கூடிய தரம் உயர்த்தப்பட்ட செயல்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் 1,400 தானியங்கி மழைமானி  மற்றும் 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் என்பதால் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
 
துல்லியமான வானிலை ஆய்வு செய்திகளின் மூலம் பேரிடர் பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், வடகிழக்கு பருவமழையின் போது ஒரு உயிரிழப்பும் ஏற்படாதவாறு அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments