வடகிழக்கு பருவமழையால் ஒரு உயிரிழப்பு கூட இருக்க கூடாது: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

Siva
திங்கள், 30 செப்டம்பர் 2024 (11:39 IST)
வடகிழக்கு பருவமழையின் போது ஒரு உயிரிழப்பும் ஏற்படக் கூடாது என்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

காலம் நிலை மாற்றத்தால் ஒரே நேரத்தில்  மொத்தமாக பெய்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க, வானிலை தகவல்களை உடனுக்குடன் வழங்க கூடிய தரம் உயர்த்தப்பட்ட செயல்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் 1,400 தானியங்கி மழைமானி  மற்றும் 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் என்பதால் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
 
துல்லியமான வானிலை ஆய்வு செய்திகளின் மூலம் பேரிடர் பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், வடகிழக்கு பருவமழையின் போது ஒரு உயிரிழப்பும் ஏற்படாதவாறு அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments