Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை தொடங்கி வைத்த முதல்வர்

Sinoj
திங்கள், 22 ஜனவரி 2024 (20:36 IST)
சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களைக் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 21 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 நவீன நெல் சேமிப்பு தளங்களைத் திறந்து, பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கினேன்.

மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பாக சேவைபுரிந்தவர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கினேன். பெரியபாளையம் - அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், மேல்மலையனூர் - அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், ஆனைமலை - அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன். சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணைகள் மற்றும் ஜவுளி தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 17 தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகையாக 9.25 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினேன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments