Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடி நிறுவனங்கள் ஆட்களை குறைக்க கூடாது – முதல்வர் வேண்டுகோள்!

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (12:25 IST)
சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

சர்வதேச தகவல் மற்றும் தொலைத்தொடர்பு மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகள் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

தற்போது இன்போசிஸ், காக்னிசண்ட் போன்ற ஐடி நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கைகளி ஈடுபட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவுகளை குறைக்கவும், வருவாயை அதிகரிக்கவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனம் 10 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு நீக்க போவதாக அறிவித்தது.

இதுகுறித்து பேசிய முதல்வர் ”தகவல் தொழில்நுட்பத்தை அதிகளவு பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஐடி துறை நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதிகளை திருமணம் செய்த 60 பாகிஸ்தான் பெண்கள் நாடு கடத்தல்.. இந்தியா அதிரடி..!

ஜாதி வாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசே நடத்தும்.. அமைச்சரவையில் ஒப்புதல்..!

மோடி திரும்ப திரும்ப அதே தவறை செய்கிறார்! போர் சூழல் குறித்து பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கருத்து!

10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற பாகிஸ்தான் பாதுகாப்பு படை.. இந்தியாவை சமாதானப்படுத்தவா?

கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments