Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணி 24 மணி நேரத்தில்... அதி தீவிரமாகும் புல் புல்!

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (12:10 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள புல் புல் புயல் அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்காள விரிகுடாவில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உண்டானது. பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடைந்த அது புயலாக தீவிரமடைந்தது. அதற்கு புல்புல் என பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்த புல்புல் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்றாலும், கடல்பகுதியில் 130 முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்படுகிறது. இந்த புயல், அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. 
 
மேலும் இந்த புயலால் மணிக்கு 70 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், மீனவர்கள் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
 
புல் புல் புயல் காரணமாக, தமிழகம மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments