Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணி 24 மணி நேரத்தில்... அதி தீவிரமாகும் புல் புல்!

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (12:10 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள புல் புல் புயல் அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்காள விரிகுடாவில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உண்டானது. பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடைந்த அது புயலாக தீவிரமடைந்தது. அதற்கு புல்புல் என பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்த புல்புல் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்றாலும், கடல்பகுதியில் 130 முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்படுகிறது. இந்த புயல், அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. 
 
மேலும் இந்த புயலால் மணிக்கு 70 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், மீனவர்கள் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
 
புல் புல் புயல் காரணமாக, தமிழகம மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments