Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைச்சரவை கூட்டம்; ஆழ்துளை கிணறுகளுக்கு புதிய சட்டம்?

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (18:57 IST)
தமிழக அமைச்சரவை கூட்டம் நவம்பர் 2ம் தேதி கூடவிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் திடீரென கூட்டப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கொள்கை ரீதியிலான முக்கியமான முடிவுகள் அதில் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியானதையடுத்து, ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான ஆலோசனையும் அதில் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் எதிர் வரும் பருவமழையினால் வெள்ளப்பெருக்கு, விவசாய நிலங்கள் சேதம் ஏற்படலாம் என்பதால் மழை சேதாரங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த முடிவுகளும் இந்த கூட்டத்தில் எடுக்கவுள்ளதாக பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments