Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறநிலையத்துறை அதிகாரிகளை திருப்பி அனுப்பிய தீட்சிதர்கள் .. சிதம்பரத்தில் பரபரப்பு..!

chidambaram
, செவ்வாய், 26 டிசம்பர் 2023 (10:45 IST)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏற பக்தர்களை அனுமதிப்பது குறித்து  விசாரணை செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலுக்கு சென்ற போது அவர்களை தீட்சர்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
 சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கனகசபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க தீட்சிதர்கள் மறுத்தனர்.  
 
இது குறித்து விசாரணை செய்ய அதிகாரிகள் கோயிலுக்கு வந்த போது அவர்களை தீட்சதர்கள் அனுமதிக்க மறுத்தனர்.  தங்களை பணி செய்ய விடாமல் மிரட்டும் தொனியில் பேசியதாக அறநிலையத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  
 
இதனை அடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்குள் சென்றதாகவும் மீண்டும் அவர்களை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொது சிவில் சட்டம்: பாஜக ஆட்சி செய்யும் 10 மாநிலங்களில் அமல்படுத்த தீவிரம்..!