Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்த சென்னை வாலிபர்: தீவிர விசாரணை!

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (10:42 IST)
கேரள வாலிபர் ஒருவர் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை ஹேக் செய்தது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
சென்னையில் கடந்த 15 நாட்களில் 72,000 லேண்ட்லைன் இணைப்புகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் அழைப்புகள் செய்யப்பட்டுள்ளதை பிஎஸ்என்எல் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
 
இதனையடுத்து இதுகுறித்து விசாரணை செய்த போது சந்தேகத்துக்கிடமான ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் உள்ள 7 சிம் கார்டு பெட்டிகளை காவல்துறையினர் மீட்டதாகவும் ஒவ்வொரு பெட்டியிலும் 32 சிம்கார்டுகள் இருந்ததாகவும் தெரிய வந்ததை அடுத்து அந்த வீட்டில் இருந்த நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்தபோது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை ஹேக் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து அவர் தீவிரவாதியா? அவர் எதற்காக பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்தார் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments