Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கிலும் அடங்காத பைக் ரேஸர்கள்! – சென்னையில் தீவிர பாதுகாப்பு!

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (09:49 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை முழுவதிலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் பல இடங்களில் பைக் ரேஸ் நடைபெறுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னைவாசிகள் சிலர் நள்ளிரவு நேரங்களில் பைக் ரேஸ் போன்றவற்றில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியில் முறசொலிமாறன் மேம்பாலத்தில் இளைஞர்கள் பலர் பைக் ரேஸில் ஈடுபடுவதாக தெரிய வந்ததையடுத்து அங்கு முழுவதுமாக தடைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பனீயில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கனரக வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் மேம்பாலத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments