Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 24 மணி நேரத்தில் புயல்... சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து

Webdunia
சனி, 10 நவம்பர் 2018 (16:27 IST)
தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மலையடிவாரத்தில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது அந்தமான் பகுதியில் நிலவிவருகிறது. 
 
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்ற புயலாக அடுத்த 24 மணி நேரத்தில் மாறவுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
இதன் காரணமாக அந்தமான் நிகோபர் தீவுகளில் மிக கனமழை பெய்து வருகிறது. மேலும், அந்தமான் கடல் மற்றும் பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. 
 
இதனிடையே சர்வதேச வானிலை அமைப்புகள் அந்தமான் கடலில் உருவாகும் புயல் சென்னையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். 
 
அதன்படி, வரும் 14 ஆம் தேதி சென்னை அருகே மையம் கொண்டு இருக்கும் புயல் 15 ஆம் தேதி காலை சென்னையை நெருங்கும். அன்றைய தினம் மாலை புதுவை நோக்கி நகர்ந்து 16 ஆம் தேதி காலையில் புதுவை அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே 13 ஆம் தேதி முதல் சென்னையில் மழையை எதிர்பார்க்கலாம். ஆனால், காற்றின் திசை மாறினால் இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments