Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருங்கும் நவம்பர், டிசம்பர்; மழையால் மீண்டும் சென்னைக்கு ஆபத்தா??

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (10:04 IST)
கடந்த இரு வருடங்களாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் சென்னைக்கு ஏதோ ஒரு அபாயம் ஏற்படுகிறது. இந்த வருடம் மழையால் மீண்டும் ஆபத்து வருமோ என மக்கள் பீதியில் உள்ளனர். 


 

 
 
வடகிழக்கு பருவமழை வரும் ஒன்றாம் தேதி முதல் துவங்கவுள்ளது.  இந்நிலையில் கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்ப்பார்த்த அளவு இல்லை. ஆனால், தென்மேற்கு பருவமழை தனது இயல்பைவிட அதிகம் பெய்தது. 
 
தற்போது, வடகிழக்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக துவங்கினாலும் பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்யும் என கூறப்படுகிறது.
 
அதோடு, வங்க கடலில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் சில இடங்களில் மிதமான மழையும் கனமழையும் பொழிவதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
மேலும் கனமழை எப்பொழுது இருக்கும் என்பதை 4 அல்லது 5 நாட்களுக்கு முன்பாகதான் கணிக்க முடியும் எனவும் சென்னை மழை மற்றும் புயல் வெள்ளதால் மூழ்கும் என வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments