Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரவாயல் - வாலாஜா சாலையில் 50% மட்டுமே கட்டணம்

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (12:42 IST)
சென்னை மதுரவாயல் - வாலாஜா சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என தகவல். 

 
மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை பராமரிக்கப்படாதது குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் சாலையை சீரமைக்கும் வரை 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவிட்டிருந்தது.
 
அதன்படி சென்னை மதுரவாயல் - வாலாஜா சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 50% கட்டணம் வசூல் என்று நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments