சென்னை பல்கலையின் செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (08:59 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதன் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஜனவரி 21ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தொடங்க இருந்த நிலையில் அந்தத் தேர்வுகளை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
இந்த தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments