Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் 5 பேருக்குக் கொரோனா!

சென்னை தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் 5 பேருக்குக் கொரோனா!
, செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (09:09 IST)
சென்னையில் தனியார் தொலைக்காட்சி சேனலில் வேலைப் பார்த்து வந்த 5 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உள்ளது. தமிழகத்திலேயே அதிக பாதிப்பு உள்ள பகுதியாக சென்னை உள்ளது.  அங்கு கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகமாகிவரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் எனப் பணியில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேனலின் செய்திப் பிரிவு ஆசிரியர் மற்றும் அவருடன் பணிபுரிந்த 4 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு  முன்னதாக் முன்னணி ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுக்கோட்டையில் முதல் கொரோனா பாதிப்பு! குழப்பத்தில் அரசு அதிகாரிகள்!