Publish Date: Thu, 28 Sep 2023 (09:52 IST)
Updated Date: Thu, 28 Sep 2023 (09:53 IST)
தொடர் விடுமுறையால் பேருந்துகள் மற்றும் ரயிலில் செல்ல முடியாத பயணிகள் விமானத்தில் செல்ல முயற்சி செய்யும் நிலையில் விமானத்தில் கட்டணம் உச்சம் சென்றுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக பெறப்படும் விமான கட்டணத்தில் இருந்து விடுமுறை காரணமாக மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.3,853 வசூலிக்கப்படும். ஆனால் இன்று ரூ.11,173 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல் சென்னையிலிருந்து சுற்றுலாத் தலமான தாய்லாந்துக்கு வழக்கமாக 9 ஆயிரம் வசூலிக்கப்படும். ஆனால் இன்று ரூ.22,000 முதல் ரூ.39ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் வளைகுடா நாடுகளுக்கு விமானம் கட்டணம் அதிகரித்துள்ளது.
இந்த கட்டண உயர்வை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.