Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: மகாராஷ்டிராவில் உச்சம்!

6 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: மகாராஷ்டிராவில் உச்சம்!
, வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:59 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,734 ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் 1138 பேரும், தமிழகத்தில் 738 பேரும், டெல்லியில் 669 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 149லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 411 லிருந்து 473 ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருமான வரி செலுத்துவோருக்கு திரும்பி வரும் ரீபண்ட் பணம்: அதிரடி உத்தரவு