Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் போக்குவரத்து மாற்றம்: மாநகர காவல்துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (17:14 IST)
சென்னையில் நேற்று திடீரென பெய்த கனமழை காரணமாக பல சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பது காரணத்தாலும் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தாலும் சென்னை பெருநகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்ஷன் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது 
 
சென்னை பெருநகரில் மழைநீர் தேங்கி உள்ள சுரங்கப் பாதை மற்றும் சாலைகளில் உள்ள மழை நீரை மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகல் அந்த பகுதியிலும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
 
மேலும் ஒருசில சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல் பொதுமக்கள் மாற்று சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
மேலும் கேகே நகர், ராஜமன்னார் சாலை, கேபி தாசன் சாலை, ராஜரத்தினம் மைதானம் சாலை, திருமலைப்பிள்ளை சாலை, பிரகாசம் சாலை, அண்ணா சாலை ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் மெதுவாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments