Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் போக்குவரத்து மாற்றம்: மாநகர காவல்துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (17:14 IST)
சென்னையில் நேற்று திடீரென பெய்த கனமழை காரணமாக பல சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பது காரணத்தாலும் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தாலும் சென்னை பெருநகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்ஷன் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது 
 
சென்னை பெருநகரில் மழைநீர் தேங்கி உள்ள சுரங்கப் பாதை மற்றும் சாலைகளில் உள்ள மழை நீரை மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகல் அந்த பகுதியிலும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
 
மேலும் ஒருசில சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல் பொதுமக்கள் மாற்று சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
மேலும் கேகே நகர், ராஜமன்னார் சாலை, கேபி தாசன் சாலை, ராஜரத்தினம் மைதானம் சாலை, திருமலைப்பிள்ளை சாலை, பிரகாசம் சாலை, அண்ணா சாலை ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் மெதுவாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments